மீண்டும் சமையல் எரிவாயுவிற்காக வரிசையில் நிற்கும் மக்கள்

யாழ்.மாவட்ட மக்கள் பல நாட்களாக சமையல் எரிவாயு கிடைக்காமல் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலைமையில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக யாழ் மக்கள் தெரிவித்துள்ளனர். சமையல் எரிவாயுடன் லொறி வரும் வரை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எரிவாயு வந்த பிறகும், எரிவாயு வாங்க மக்கள் கடுமையாக போராட வேண்டியுள்ளதென குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்னர் யாழ் மக்கள் சிலிண்டருடன் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.